சர்வதேச கல்வி நிலையத்தின் பிராந்திய கிளை இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது
கொழும்பை தலைமை கல்வி நிறுவனமாக கொண்டு இயங்கும் ஐ.எஸ்.சி என அழைக்கப்படும் சர்வதேச கல்வி நிலையமானது, கிழக்கு
மாகாண மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை அபிவிருத்தி செய்யும் வகையில் கிழக்கு மாகாணத்திற்கான பிராந்திய கிளையை இன்று மட்டக்களப்பு
நகரில் ஸ்தாபித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கான முகாமைத்து பணிப்பாளர் வைத்தியர் வி.ரேணுகாந்தின் ஏற்பாட்டில், கல்வி நிலையத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியர் ஹரி பிரசாத் தலைமையில் இடம் பெற்ற கல்வி நிலையம் திறப்பு விழா நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக சர்வ மத தலைவர்கள் பங்கேற்று ஆசி வழங்கினர்.
சிறப்பு அதிதியாக பேராசிரியர் அந்தனி அன்றூ கலந்துகொண்டார்.
ஐ.எஸ்.சி நிறுவனத்தின் குடும உறுப்பினர்கள், நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.