யாழ்ப்பாணம் – கொக்குவில் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் பயணச்சீட்டுக்களை யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கொக்குவில் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொக்குவில் உப ரயில் நிலையத்தில் சுற்றறிக்கை மூலம் நியமிக்கப்பட்ட ரயில் நிலைய அதிபர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டு ஒன்று பதிவாகியுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.