நாட்டில் உள்ள, அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு, மேலும் மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 20 ஆம் திகதி புதன்கிழமை வரை, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு, இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, எதிர்வரும் 21 ஆம் திகதி, இந்த ஆண்டிற்கான இரண்டாம் தவணை ஆரம்பமாகவுள்ளதாகவும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.