பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலாப் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
நேற்று பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகும் பெந்தர காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகு ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பெந்தர சுற்றுலா விடுதியொன்றிலிருந்த இருவர் விபத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருவதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.