போதைப் பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை சோதனையிட்டபோது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
அதன்போது, 19 கிராம் குஷ் போதைப்பொருளும், 3 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும், 35 வயதான பிரித்தானிய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.