களனி கங்கையில் வெள்ள அபாய நிலை தொடர்ந்தும் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே களனி ஆற்றை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் நாட்டில் அதிகூடிய மழைவீழ்ச்சி புளத்கொஹூப்பிட்டியவில் பதிவாகியுள்ளது. அங்கு 206 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.