27.3 C
Colombo
Saturday, May 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஹொரணையில் துப்பாக்கிப் பிரயோகம்

ஹொரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சொகுசு காரில் பயணித்த நபர்  காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்  வட்டிக்கு கடன் வழங்குபவர் என  தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது வாய் பகுதியில்  துப்பாக்கிச்  சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக இதுவரை கிடைத்துள்ள தகவல்களில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles