T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கையின் ஆரம்ப அணி பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்காக 32 வீரர்கள் உள்ளடக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, பானுக ராஜபக்ச,விஜய்காந்த் வியாஸ்காந்த் மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. விஜயகாந்த் வியாஸ்காந்த் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் விளையாடி வருகிறார். இந்நிலையில் , ஆரம்ப அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் உள்நாட்டு T20 போட்டிகளில் விளையாடுவார்கள்.
அங்கு காட்டப்படும் திறமையின் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இறுதி அணி பெயரிடப்படும் என கூறப்படுகிறது. 32 பேர் கொண்ட இலங்கையின் ஆரம்ப T20 அணி கீழே உள்ளது.
வனிந்து ஹசரங்க (தலைவர்),சரித் அசலங்க (துணைத் தலைவர்),குசல் மெண்டிஸ், பதும் நிஷ்சங்க, சதீர சமரவிக்ரம, அஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக, சாமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, அவிஷ்க பெர்னாண்டோல, சித் க்ருஸ்புல்லே, தினேஷ் சந்திமால், சஹான் ஆரச்சிகே, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீரடில்ஷான், மதுஷங்கஅசித, பெர்னாண்டோபிரமோத், மதுஷான்,மகேஷ் தீக்ஷன,மதீஷ பத்திரன,லஹிரு குமார,லஹிரு மதுஷங்க,
நுவன் துஷார, பினுர பெர்னாண்டோ,ஜெப்ரி வெண்டர்சே,விஜய்காந்த் வியாஸ்காந்த்