இந்திய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அனுமதி வழங்கியுள்ளார்.இதன்படி இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்தக் குழாமில் குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சமிந்து விக்ரமசிங்க ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.