28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கோர விபத்துக்குள்ளான அரச பேருந்து: 25 பேர் காயம்

சிலாபம் (Chilaw) – கொழும்பு (Colombo) வீதியில் அரச பேருந்து ஒன்றும் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று (4.7.2024) காலை மாதம்ப – கலஹிடியாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், தேவால சந்தியிலிருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் புத்தளத்திலிருந்து (Puttalam) கொழும்பு நோக்கி அதே திசையில் பயணித்த சீமெந்து பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து ஹலவத்த பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles