மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், காங்கேயனோடை அல் அக்ஸா மகாவித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட அதிபர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
பாடசாலையின் பழைய மாணவர்களின் நிதி பங்களிப்புடன், அதிபர் அலுவலகம் புனரமைக்கப்பட்டுள்ளது.
அதிபர் அலுவலகத்தினை, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பசீல் திறந்து வைத்தார். திறப்பு விழா, பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்றது. விழாவில், காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி ஏ.ஜி.எம்.ஹக்கீம், ஆசிரிய ஆலோசகர் நஜிமுதீன், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள்; என பலரும் கலந்து கொண்டனர்.