இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் உணவு நிலம் சுற்றாடல் தொடர்பாக கிராமிய மக்களுக்கு விழிப்பூட்டல் வழங்கும் நிகழ்வு, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பு ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றது.
மாணவர்கள் மற்றும் பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் நடைபவனியும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
கங்காதேவி மீனவர் கூட்டுறவுச் சங்கப் பொருளாளர் சுலோசனாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாத்திமா சர்மிலா, மீனவர் சங்கத் தலைவர் தர்மா, செயலளார் மதி உட்பட பிரதேச களப்பு மீனவர்களும் கலந்து கொண்டனர்.