26.3 C
Colombo
Sunday, May 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொங்கிறீட் சிலிண்டரில் சிக்கி மாணவன் பலி

கொங்கிறீட் சிலிண்டர் ஒன்றில் சிக்கி மஸ்கெலியாவில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் 6ஆம் தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரே நேற்று உயிரிழந்தார்.

பாடசாலை மைதானத்தில், குறித்த கொங்கிறீட் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒன்று உருண்டு சென்றதில் குறித்த மாணவர் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பலத்த காயமடைந்த மாணவர் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

குறித்த கொங்கிறீட் சிலிண்டர்கள் தோட்ட நிர்வாகத்தினால் பாடசாலை வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா காவல்துறையும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles